கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது வேளாண் விற்பனை துறை மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து காட்பாடி தற்காலிக காய்கறி உழவர் சந்தையில் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நுகர்வோர் என 45 வயத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை துறை மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து இன்று காட்பாடி டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி சந்தையில் உள்ள விவசாயிகளுக்கு கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காட்பாடி டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் காய்கறி விற்பனை மையத்தில் தடுப்பூசி செலுத்தும் குழுவின் மருத்துவர் மார்க்ஸ்காஸ்ரோ தலைமையில் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் நரசிம்ம ரெட்டி முன்னிலையில் பள்ளிக்குப்பம் சுகாதார செவிலியர் ரதி தடுப்பூசி செலுத்தினார். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், வேளாண் விற்பனை அலுவலர் வீனாபிரியா, உதவி அலுவலர்கள் காயத்திரி, ஜெகதீஸ்வரன், வினோத்குமார் ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி செயலாளர் எஸ்.எஸ். சிவவடிவு, வேலூர் மாநகராட்சி மேற்பார்வையாளர் கே.டேவிட் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆகியோர் சமூக இடைவெளியை பின்பற்றிட பொதுமக்களை நெறிப்படுத்தினர்.
விவசாயிகள் அவர்தம் குடும்பத்தினருக்கும் நுகர்வோருக்கும் என 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
காட்பாடி டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் காய்கறி விற்பனை மையத்தில் தடுப்பூசி செலுத்தும் குழுவின் மருத்துவர் மார்க்ஸ்காஸ்ரோ தலைமையில் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் நரசிம்ம ரெட்டி முன்னிலையில் பள்ளிக்குப்பம் சுகாதார செவிலியர் ரதி தடுப்பூசி செலுத்தினார். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், வேளாண் விற்பனை அலுவலர் வீனாபிரியா, ஆகியோர்.