அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் அம்பலூர் சு. மோகன் ...?
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அ.சண்முகசுந்தரம் அவர்கள் பத்திரிகைத்துறையைசேர்ந்த  110 நபர்களுக்கு  தேர்தல் அடையாள அட்டைக்கு ஒப்புதல் வழங்கினார். இரண்டு நாட்கள் ஆகியும்.  இன்னும் பி.ஆர்.ஓ- அம்பலூர் சு. மோகனால் வழங்கப்படவில்லை . இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான அ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. எனவே, பி.ஆர்.ஓ அம்பலூர்   சு. மோகன் வசமுள்ள அனைத்து தேர்தல் அடையாள அட்டைகளையும் தேர்தல் வட்டாட்சியர் ஶ்ரீராம்வசம் உடனடியாக ஒப்படைக்க உத்திரவிட்டார். 110 நபர்களில் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் ஶ்ரீராம் வட்டாட்சியரை உடனே அணுகி பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டார்.  தேர்தல் சமயங்களில் பி.ஆர்.ஓ அலுவலகம் மூலமாகவே தேர்தல் அட்டை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை தேர்தல் அட்டை பி.ஆர்.ஒ மூலமாக வழங்கும் அதிகாரத்தை பறித்து தேர்தல் வட்டாட்சியர் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு தேர்தல்அடையாள அட்டை வழங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் முறையாக விண்ணப்பித்து தேர்தல் அட்டை கிடைக்காதவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முகசுந்தரம் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக மனுஅளித்தனர். அதன் பின் பி .ஆர் .ஓ அம்பலூர் சு. மோகன் மீது பத்திரிகையாளர்கள் சரமாரியாக புகார் கூறினர்.இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிந்த பிறகு பி.ஆர்.ஓ அம்பலூர் சு. மோகன் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பணி மாற்றம் நிச்சயம் என்கிறது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்