கெத்தாக வலம் வந்த வி.ஏ.ஓ கோவிந்த் ஸ்ரீயை விஜிலென்ஸ் போலீஸ் கொத்தாக தூக்கம் நிலை. வி.ஏ.ஓ கோவிந்த் ஸ்ரீ யின் கோல்மால் வேலைகள் வெளிச்சத்திற்கு வராத தகவல்கள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா எருக்கம்பட்டு கிராம வி.ஏ.ஓ வாக பணியாற்றி வருபவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த்ஸ்ரீ இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார் இவர் குரூப் 4-ல் தேர்வில் தேர்ச்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக வேலூர் மாவட்ட விண்ணம்பள்ளி, மேல்மயில், பழைய காட்பாடி, லத்தேரி, கே.வி குப்பம், கிராமங்களில் வி.ஏ.ஓ வாக பணியாற்றிய போது நேரடியாக லஞ்சம் வாங்குவார் தாசில்தார் துணை, தாசில்தார் சர்வேயர்கள் கையொப்பம் பணிகளை தானே முடித்து தருவதாக கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை கணிசமாக கரந்து விடுவாராம் இது தவிர புறம்போக்கு இடங்கள் தாசில்தார் துணை தாசில்தார் ஆர்.ஐ சர்வேயர்களை கைக்குள் போட்டுக்கொண்டு புறம்போக்கு இடங்களில் தபளீகரம் செய்து கொண்டு தனது உறவினர்கள் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து விடுவாராம், இது தவிர மேலும் வருவாய் துறை எந்த சான்று பொதுமக்கள் விண்ணப்பித்தாலும் ஒவ்வொரு சான்றுக்கு ஒரு ரேட் நிர்ணயம் செய்து வசூலித்து வருவாராம் ஏற்கனவே காட்பாடியில் வி.ஏ.ஓ வாக பணியாற்றிய வந்தபோது இவர் மீது பொதுமக்கள் கூறிய புகாரின் பேரில் அப்போது இருந்த தாசில்தார் இவர்க்கு மெமோ வழங்கினார் இதுதவிர சிப்பந்தி ஜேக்கப்பை மூலமாக ஐதராபாத்தை சேர்ந்த மார்வாடி பெண் தனது கள்ளக் காதலனுடன் ஓடி வந்த இரு நபர்களும் ஆதாரில் முகவரி மாற்றம் பெயர் மாற்றம் செய்வதற்கு சான்று பெற கையொப்பமிட்டு அந்த பெண் காதலனுடன் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கை வைத்து உதவியதின் பேரில் அவர் மீது ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து உள்ளதாக அது விசாரணைக்கு உட்பட்டு தற்போது வரை நடைபெற்று வருவதாகவும் வி.ஏ.ஓ வட்டாரத்தில் பேசப்படுகின்றது இவர் கே.வி குப்பம் தாலுகாவில் பணியாற்றியபோது தனது துறையை சேர்ந்த வி.ஏ.ஓ ஒருவரின் எதிராக செயல்பட்டு தாசில்தார். துணை தாசில்தார் ஆகியோருக்கு சட்ட சிக்கலில் சிக்க விட்டுள்ளார் இதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் பேரணாம்பட்டு தாலுகாவில் எருக்கம்பட்டு கிராமத்தில் இவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு அடுக்கடுக்காக சொல்லப்பட்டு வருகிறது இதனால் கே.வி குப்பம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ லோகநாதன் ஆசியுடன் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் பணி மாற்றத்திற்கு ஒரு பெரும் தொகை கொடுத்துள்ளார் அவரும் பணத்தை வாங்கி கொண்டு தேர்தல் என்பதால் தற்போது கண்டும் காணாமல் உள்ளாராம் கோவிந்த் ஸ்ரீ தான் பணம் கொடுத்து ஏமார்ந்து விஷயத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம் கோவிந்த் ஸ்ரீ இது தவிர இவர் மீது புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்ததில் இவர் அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மொட்டை போட்டு விடுவாராம் பேச்சு வல்லமை படைத்த கோவிந்த் ஸ்ரீ எனவே தில்லாலங்கடி பேர்வழி கோவிந்த் ஸ்ரீக்கு யாரு முடிவு கட்டப் போகிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர் இவரால் பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ துணை தாசில்தார்கள் மற்றும் பொதுமக்கள்...?