குடியாத்தம் பி.டி.ஓ. அலுவலகத்தில் திருமண நிதி உதவிக்கு லஞ்சம்
 
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பி.டி.ஓ. அலுவலகத்தில் திருமண நிதியுதவி திட்டத்துக்கு பணம் வழங்க லஞ்சம் கேட்டு பெறும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூபாய் 25.000 ஒரு சவரன் தங்கம், அதேபோல் விதவை மகள் திருமணத்திற்கு ரூபாய் 25.000, ஒரு சவரன் தங்கம், மறுமணத்திற்கும் ரூபாய் 25.000 ஒரு சவரன் தங்கம், கலப்பு திருமணத்திற்கும் ரூபாய் 25.000 ஒரு சவரன் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 5.0000 ஒரு சவரன் தங்கம், என செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொருவரும் ஒவ்வொரு பி.டி.ஓ, அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்பு விரிவாக்க பிரிவில் விண்ணப்பதாரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எம்.எஸ் ஜி.எஸ், மூலமாக விண்ணப்பித்தார்கள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகல்களை எம்.எஸ்., சமூக நல விரிவாக்க அலுவலர் (மற்றும் ஜி.எஸ்.,) ஊர் நல விரிவாக்க அலுவலர்கள் ஆகியோரிடம் மூன்று நகல்கள் வழங்க வேண்டும்.
இவர்கள் திருமணத்திற்கு முன்னதாக திடீரென மணப்பெண் வீட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். எம்.எஸ். மற்றும் ஜி.எஸ்கள் அந்த சமயத்தில் மணப்பெண்ணின் வசதி வாய்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பி.டி.ஓ .,அலுவலகத்தில் தற்போது திருமண நிதி உதவித் திட்டத்தில் சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க  அலுவலர்களாக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பச்சையம்மாள் (எம்.எஸ்) மற்றும் சமூக நலப் பாதுகாப்பு ஊர் நல விரிவாக்க அலுவலராக சென்னையை சேர்ந்த மேரி என்பவர் பணியாற்றி வருபவர்  இவர்கள் இருப்பவர் கூட்டணியிலும் ரூபாய் 25 ஆயிரம் ஒரு சவரன் திட்டத்திற்கு, ரூபாய் 10 ஆயிரம் அதேபோல் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 50,000 ஒரு சவரன் திட்டத்திற்கு, ரூபாய் 15000 லஞ்சம் வாங்குவதாக விண்ணப்பதாரர்கள் சொல்லு கின்றனர். இவர்கள் கேட்கும் லஞ் சப்பணத்தை கொடுக்க வில்லை என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விண்ணப்பத்தை ஓரம்கட்டி விடுவார்களாம். இதற்கு பயந்து வந்த வரை லாபம் என விண்ணப்பதாரர்கள் இவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து காரியத்தை முடித்துக்கொள்கிறார் கள். இந்த பணத்தில் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்குவதுதான் இவர்களது டெக்னிக். இது தவிர கொடி நாள் வசூல், ராணுவ வீரர் தின வசூல் என விண்ணப்பதாரர்களை தொந்தரவு செய்து அவர்களிடம் போலி பில்களை காட்டி லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு வலம் வருகிறார்களாம் எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் என்றால் இது தவிர ஏற்கனவே அரசு திருமண நிதி உதவித் திட்டத்திற்கு சரியாக நிதி ஒதுக்காமல் போகவே கடன் உடன் வாங்கி திருமணத்தை நடத்திய தாய்மார்கள் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த அரசின் திருமண நிதி உதவி எப்போது வரும் என்று தவியாய் தவித்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாரியாக திருமணம் முடிந்த பெண்களுக்கு நிதியை ஒதுக்கி திருமண நிதி உதவித் திட்டம் வழங்க உள்ளநிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண உதவித்திட்டம் பிரிவில் தூசி தட்டும் பணியை தொடங்கப்பட்டு மாதக்கணக்கில் ஆகிறது மேலும் பயனாளிகளின் மனுக்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு  வரும் எம்.எஸ், ஜி.எஸ்கள் இது சரியில்லை அது சரியில்லை என்று மக்களை ஏசுவதும் ஒருமையில் பேசுவதும் தூரம் போ சனியனே பயனாளிகளை திட்டுவதும் உண்டு என்கிறார்கள் அப்பாவி பயனாளிகள், இது சம்பந்தமாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும்போது இந்த பி.டி.ஓ  அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர் நல விரிவாக்க அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதற்கு தனிப்பயிற்சி எடுத்திருப்பார்கள் போல்  தெரிகிறது என்று கூறுகிறார் இதனை நமது  நிருபர் நேரிலும் பார்த்தும் காதால் கேட்க முடிந்தது மேலும் சமனசாட்சி இல்லாமல் எம்.எஸ்களும் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் எப்போது தீர்வு கிடைக்கும் என்று விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர். இனியாவது சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சர் மற்றும் சமூக பாதுகாப்பு நல இயக்குநர் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ஏழை மக்கள். மேலும் வேலூர் மாவட்ட (பொறுப்பு) சமூக பாதுகாப்பு நல அலுவலராக இருப்பவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகேஸ்வரி.
இவர் வந்த பிறகு திருமண நிதி உதவி திட்டத்தில் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் எம்.எஸ் ஜி.எஸ்களும் வாங்கும் லஞ்சபணத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் முருகேஸ்வரிக்கு மாதம் மாதம் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கி வரும் திருமண நிதி உதவி திட்டம் பிரிவில் இருந்தும் பங்கு சென்றுவிடுவதால் அவர்  எம்.எஸ்., ஜி.எஸ்.,கள் வாங்கும் லஞ்ச குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அத்துடன் இதுகுறித்து  லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் கேட்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நிதி உதவித் திட்ட பிரிவில் எம் எஸ் ஆக பணியாற்றி வந்தவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி இவர் சென்ற 2019ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டிக்கண்டது குறிப்பிடத்தக்கது அதுபோன்று மீண்டும் திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினால் பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள பணப் பேய்கள் சிக்கக் கூடும் என்கிறார்கள பெயரை சொல்லாத அலுவலக ஊழியர்கள்

கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்