கருணை மனு கைகொடுக்குமா?.

 


 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்த பகுதிநேர ஆசிரியர்கள் புது முயற்சி !


 


 


ஊதிய உயர்வுடன் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணை மனு தினமும் அனுப்பி கவன ஈர்ப்பு செய்து வருகின்றனர்.


 


இதன் நகலை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு அனுப்பி கவன ஈர்ப்பு செய்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.


 


மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மனு நீதி நாளில் நேரிலும் கருணை மனுவை கொடுத்து கவன ஈர்ப்பு செய்து வருகின்றார்கள்.


 


இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-


 


முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 26.08.2011ல் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி எண்.110-ன்கீழ் அறிவிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கம் அரசாணை 177 நாள் 11.11.2011 மூலம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-2012 கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டனர்.


 


உடற்கல்வி, ஓவியம், மற்றும் தொழிற்கல்வி (கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி) ஆகிய கல்விஇணைச்செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.


 


10வது கல்வியாண்டு நடக்கிறது. ஊதியஉயர்வு ரூ.2ஆயிரம் 3வது கல்வியாண்டில், பின்னர் 6வது கல்வியாண்டில் ரூ.700 வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை.


 


இந்த ரூ.7700/- தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.


 


16549 பேரில் மரணம், பணிஓய்வு என 4ஆயிரத்திற்கும் மேலான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.


 


தற்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த கல்வி (SAMAGRA SHIKSHA) என செயல்பட்டு வருகிறது.


 


இதனால் பள்ளிகளும் ஒருங்கிணைப்பட்டு ஒரே அலகின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 


 


இந்த நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பணிநியமன அரசாணை 177ன்படி 4 பள்ளிகளிலோ அல்லது அரசாணை 186ன்படி 2 பள்ளிகளிலோ பணிஒதுக்கி சம்பளத்தை ரூ.15ஆயிராமாக, ரூ.23ஆயிரமாக, ரூ.30ஆயிரமாக அதிகரித்து இருக்கலாம். ஆனாலும் செயல்படுத்தவில்லை.


 


கடந்த 9 வருடமாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் சுமார் ரூ.60ஆயிரம் இழந்து தவிக்கின்றனர். 


 


போனஸ், 7வது ஊதியக்குழு 30% ஊதியஉயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, விபத்து காப்பீடு இதுவரை வழங்கவில்லை.


 


இந்த நிலையிலும் அரசின் உத்தரவை ஏற்று, வேலைநிறுத்த காலங்களில், பள்ளிகளை திறந்து நடத்துகிறோம்.


 


ஜாக்டோஜியோ போராட்ட காலங்களில் பள்ளிகளை நடத்தும் அனுபவம் மற்றும் அரசுப்பணிக்குரிய கல்வித்தகுதியோடு 10 கல்வியாண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்.


 


பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


 


16508 துப்புரவு பணியாளர்கள் ஊரக வளர்ச்சித்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 


 


காவல்துறையில் ரூ.7500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த சிறப்பு இளைஞர்படையினர் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


 பள்ளிக்கல்வித்துறையில் கணினி ஆசிரியர்கள் மற்றும் 5000 துப்புரவாளர்கள் இரவுக்காவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


 


வருவாய்துறையில் பகுதிநேரப்பணியாளர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


 


இது போன்று பல முன்உதராணங்கள் உள்ளது. 


 


எனவே,12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் கருணையுடன், தமிழகஅரசு செய்ய வேண்டுகிறோம்.


 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 2017-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்ததை அமுல்செய்ய வேண்டுகிறோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். 


 


மேலும் வரும் ஜனவரி சட்டசபை கூட்டத்தொடரில், இடைக்கால பட்ஜெட்டில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே கருணை மனுக்களை அனுப்பி வருகின்றோம்.


 


ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதை கருணையுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்.


 


தேர்தலுக்கு முன்பாக பகுதிநேர ஆசிரியர்களை தமிழகஅரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் கேட்டு கொள்கிறோம் என்றார். 


 


 


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்