அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முகம் கவசம் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்


 


உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் தற்போது தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் வீதியில் பொதுமக்களில் பலர் முககவசம் அணியாமல் துணி , நகை , பட்டாசு , இனிப்புகள் வாங்க சென்றதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கியதோடு அனைவருக்கும் இனிய தீபதிருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அவர்களிடம் தங்களின் குழந்தைகள் மத்தாப்பு , பட்டாசு வெடிக்கும் போது பொற்றோர்களாகிய நீங்கள் அருகிலேயே இருந்து பாதுகாப்பாக வெடிக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென சங்கத்தினர் கேட்டு கொண்டனர்.இந்த தீபதிருநாளில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து ,சமூக இடைவெளியினை கடைபிடித்து , கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொரோனா என்னும் கொடிய வைரஸை இந்த உலகத்தை விட்டு ஒழிப்போம் என்று சபதம் ஏற்போம் என்று அனைவரையும் சங்கத்தினர் வணங்கி வேண்டி கேட்டுக் கொண்டனர்.இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி மற்றும் பொறுப்பாளர்கள் கருணாநிதி , அர்ச்சகர் கல்யாணவெங்கட்ராமன் , மதி , ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்