கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது


காட்பாடி நாராயணி தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய் பராவாமல் தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும், ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து தன்னார்வ தொண்டர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் காட்பாடியில் வேலூர் துணை ஆட்சியர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் பேசியதாவது..  தன்னார்வ தொண்டர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் தங்கள் பகுதியில் சமூக இடைவெளியினை அனைத்து நிலைகளில் பின்பற்ற ஆலோசனை வழங்கவும், தாங்கள் வசிக்கும் பகுதியில் நோய் தொற்று பாரவாமல் தடுக்க அரசின் அனைத்து முயற்சிகளையும் மக்களிடம் கொண்ட செல்ல வேண்டும்.  தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு காவல் துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.  தற்போது அளிக்கப்பட்ட அடையாள அட்டையினை தவாறக பயன்படுத்தக்கூடாது என்றார். காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், காட்பாடி  1வது மண்டல மாநகராட்சி துணை ஆணையர் செந்தில், ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்  மண்டல துணை வட்டாட்சியர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர்கள் செந்தாமரை, சிவகுமார், தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் கோபி, மற்ற பகுதி கிராம நிர்வாக அலுவலர்களும்  தலையாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அவர்களின் அழைப்பின்பேரில் இணைய தளம் வழியாக தன்னார்வ தொண்டு செய்ய விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் சரி பார்க்கப்பட்ட 102 தன்னார்வ தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை துணை ஆட்சியர் காமராஜ் வழங்கினார்  உடன்.  இந்தியன் ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பாரத சாரண சாரணீய இயக்கத்தின் தலைமைநிலைய ஆணையர் எஸ்.எஸ்.சிவவடிவு, தேசிய மாணவர் படையின் அலுவலர் சீனிவாசன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். துண்டறிக்கை வெளியீடு  இந்தியன் ரெட் கிராஸ் தமிழ்நாடு கிளையும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு துண்டறிக்கையினை வேலூர் துணை ஆட்சியர் காமாராஜ் வெளியிட்டார்.முடிவில் தனிவட்டாட்சியர் குணசீலன் நன்றி கூறினார்.ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளி விட்டு அமரவைக்கப்பட்டனர்.  வருகை தந்த அனைவரும் கைகழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.  பங்கேற்ற அனைவரும் முககவசம் வழங்கப்பட்டது படவிளக்கம்  கொரோனா  தொற்று நோய் பராவாமல் தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும், ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து தன்னார்வ தொண்டர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் காட்பாடியில் உள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது வேலூர் துணை ஆட்சியர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தப்படம் உடன் வட்டாட்சியர் பாலமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், துணைவட்டாசியர் குணசீலன் ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர். கொரோனா  தொற்று நோய் பராவாமல் தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும், ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து தன்னார்வ தொண்டர்களுக்கான காட்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வேலூர் துணை ஆட்சியர் காமராஜ் நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கியபோது எடுத்தப்படம் உடன் வட்டாட்சியர் பாலமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், துணை வட்டாசியர் குணசீலன் ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி, ஆகியோர். கலந்து கலந்துக். கொண்டனர்


 


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்