சென்னை, போரூரில் சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பாக தமிழ்நாடு, மாவட்ட தலைவர் கணேஷ் காந்தி அவர்கள் எழை எளிய கூலித் தொழிலாளர் களுக்கு தினந்தோறும் மதிய உணவும் மற்றும் இரவு உணவும் என்று சுமார் 23 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரு வேலையும் 1400 உணவு கள், தினமும் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுக்க குரானா காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை பிறப்பித்த நிலையில் சென்னையில் ஏழைகளுக்கு நாள் தோறும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது தொண்டு நிறுவனம் சார்பாக பல சேவைகள் தொடர்ந்து செய்துவரும் நிலையில் சென்னை போரூரில் சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பாக நாள் ஒன்றுக்கு 300 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு மளிகை பொருட்களும் பகலென்றும் இரவென்றும் பாராமல் அயராது மக்களுக்கு அளித்து வருகிறார்கள் இந்த தொண்டு நிறுவனம் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை - கொடுக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது, இரவும் பகலும் என்று பாராமல் நாட்டிற்காக பாடு படும் காவல்துறையினருக்கு இரண்டு முறை இளநீர் வழங்கி வருகிறார்கள். இந்த தொண்டு நிறுவனம் வீட்டை விட்டு வெளியே வர முடி யாத வயது முதிர்ந்தவர் களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு என்று சேவாபாரதி தொண்டு நிறுவனம் சார்பாக அதனின் மாவட்ட தலைவர் திரு கணேஷ் காந்தி அவர்கள் சேவைகளை செய்து வருகிறார். இதில் 10,000 நபர்களுக்கு மேலாக பயனடைந்து வருகிறார்கள் அவர்களுடன் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து பணியாற்றி வருகிறார்கள் மேலும் இதில் ஏழை பாழை மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகிறார்கள்.