வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குருவாராஜபாளையம் பகுதியில் வசிக்க வருபவர் திரு. என்.விமல் ராஜ் இவர் சேவை மனப்பான்மை உள்ளம் படைத்தவர். தனி ஒரு மனிதனாக இரண்டு வருடங்களாக சமூக அக்கறையுடன் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆதரவற்ற பிள்ளை களுக்கு உதவி செய்வது மேலும் தற்போது உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தமிழக அரசால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் இளைப்பாறிய ஆதரவற் றோர் அனைவரும் வறுமை யிலும் ரோட்டோரத்தில் வசிக்கும் குடும்பத்தினரும், நரிக்குறவர்கள் மக்களுக்கு, உணவின்றி தவித்து வரும் வேளையில் தனி ஒரு மனிதனாக திரு. என், விமல் ராஜ் அவர்களின் முயற்சியாக அனை வருக்கும் உணவு பொருட் கள் வழங்குவது உணவு தயாரித்து, முகம் கவசம் வழங்குவது, காய்கறி பிள்ளைகளுக்கு உணவு அளிப்பது போன்ற சேவைகள் செய்து வருபவர் திரு. என்.விமல் ராஜ் - இவருடக் ஒடுகத்தூர் பகுதியிலுள்ள நண்பர்கள் உதவியுடன் இவ்வித தொண்டு செய்து வருகிறார் இவரைப் போன்று அனை வரும் நல்லுள்ளம் படைத்து முன் வந்து ஆதரவற்ற வர்களுக்கு உதவிட வேண் டும் என்பதே இவருடைய முழு நோக்கமாகும். தன்னுடைய சொந்த பணத்திலும், மேலும் நண்பர்கள் உதவியுடன் இந்த சேவையை செய்துவருவதாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்.