ஒன்று பட்டு ஒற்றுமை கண்ட நாம்! தனித்திருந்து வெற்றி காண்போம் .அலட்சியம் செய்ய வேண்டாம். வாட்சப் மூலம் வைரலாகும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

ஒன்று பட்டு ஒற்றுமை கண்ட நாம்!  தனித்திருந்து வெற்றி காண்போம் .அலட்சியம் செய்ய வேண்டாம்.  வாட்சப் மூலம் வைரலாகும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்




தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் "எங்களின் நலனுக்காக போராடும் உங்களின் நலனுக்காகவும் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்"  என்று  வாசகங்கள் அடங்கிய தகவலை வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர மாணவர்கள்   சண்முகம், முத்தையன், முகேஷ் ஆகிய மூவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள்.இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி ஆவார்கள். மூன்று பேரும்  கொரோனா  விழிப்புணர்வு என்று தலைப்பிட்டு தகவலை பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாட்ஸ்அப் வழியாக விழிப்புணர்வு பதிவை அனுப்பி வருகின்றார்கள். அதில் அவர்கள் கூறியுள்ள தகவல் விவரம் வருமாறு :


 


                             அனைவருக்கும் வணக்கம் நாங்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கிறோம். என் பெயர் சண்முகம். என் பெயர் முத்தையன். என் பெயர் முகேஷ்.


 


                             இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசிடம்   இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை கடைபிடிக்கும் விதமாக தொடர்ந்து நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம் . நீங்களும் வீட்டிலேயே இருங்கள் . இந்த கொடிய வைரஸிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள் .எங்கள் பள்ளியில் கைகளை கழுவும் முறையை பற்றியும் வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும்,  தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்கள் மாஸ்க்  பயன்படுத்தும் முறையைப் பற்றியும் எங்களுக்கு விளக்கமாக கூறியிருக்கிறார்கள். உணவில் பழங்கள், காய்கறிகள் ,கீரைகள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். 


 


                                            ஒன்று பட்டு ஒற்றுமை கண்ட நாம்!  தனித்திருந்து வெற்றி காண்போம் .அலட்சியம் செய்ய வேண்டாம். கண்ணுக்குத் தெரியாத வைரஸிடம் இருந்து அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று இரவு பகலாக போராடும் காவல்துறையினர் ,மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், எம் பள்ளியின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் நலனுக்காக போராடும் உங்களின் நலனுக்காகவும் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். விடுமுறையாக இருந்தாலும் எங்களின்  நலனுக்காக தினமும் தொடர்பு கொண்டு எங்களின் நலன்களை விசாரித்து அறிவுரை வழங்கி வரும் எம் பள்ளியின்  ஆசிரியர்களுக்கும்  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி!வணக்கம்! உங்களின் நலனுக்காக அன்புடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் என்று தலைப்பிட்டு அந்த மாணவர்கள் விழிப்புணர்வு தகவலை கொடுத்துள்ளனர்.


                                      இதனையே வீடியோவாகவும் பேசி அனைவருக்கும் அனுப்பி உள்ளனர். மாணவர்களின் சமுதாய பற்றுதலும்,  வீட்டை விட்டு வெளியே வராமல் அனைவரையும் இருக்கச் சொல்லும் விஷயங்களும்  மிகவும் வைரலாகி முகநூல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக பரவி வருகிறது. இது பாராட்டுக்குரியது.


 


படவிளக்கம்: ஒன்று பட்டு ஒற்றுமை கண்ட நாம்!  தனித்திருந்து வெற்றி காண்போம் . அலட்சியம் செய்ய வேண்டாம் ,என்று விழிப்புணர்வு வாசகம் எழுதி அனைவருக்கும் வாட்ஸ்அப் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முத்தையன், சண்முகம், முகேஷ் .


 


 "எங்களின் நலனுக்காக போராடும் உங்களின் நலனுக்காகவும் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்" என்று உணர்ச்சி பூர்வமாக பேசும் மாணவர்கள் - வீடியோ


 


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்