வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டரா வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் 38 ஊராட்சிகளை சேர்ந்த 484 தூய்மை பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மேநீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் அரிசி, மளிகைப்பொருட்கள் கவச உடைகள், கையுறை, முககவசம், கால்களுக்கு பாதுகாப்பு பூட்ஸ் ஆகியவற்றை வழங்கினார்கள். உடன் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், அறங்காவலர் குழுத்தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் உள்ளனர்.