தகவல் கொடுப்பவர், கணித்து கூறிய தகவல். கொரோனா வைரஸ் ? ஏன் ? எதனால் ? எப்படி ? இதற்கான தீர்வு ? இப்படி பலகேள்விகள்... காரணமும், தீர்வும்

அமுதம் பெறுவதற்காக பார் கடலை கடைந்தபோது, கயிறாக பயன்பட்ட வாசுகி என்ற பாம்பு,  தன் வலி பொறுக்காது விஷம் கக்கிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் !


இப்பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை வாய்ந்த அவ்விஷம் பரவிடக்கூடாது என்பதற்காக, வினை தீர்க்கும் வித்தன், விடமுண்ட கண்டனானான் !


ஆம் நீச குணமுடைய விஷத்தை நம் ஈசன் பருகிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் ! 


அன்று வாசுகி கக்கிய அதே நட்சத்திரத்தில், அரவம் ராகு தற்போது  அமர்ந்திருந்து தனது அசுர விஷத்தை  உலகெங்கும் பரப்பி வருகிறது.


இதற்கான முதல் முடிச்சு எப்பொழுது விழுந்தது ? 


11.09.2019 அன்று அசுரன் ராகு திருவாதிரையில் நுழைகிறான். அன்று  ராகுவிற்கு ஆறு, எட்டில் கிரகங்கள் இல்லாதிருந்தால் விஷம் கக்கும் நிலை தோன்றியிருக்காது.


நமது போறாத காலம்,  அன்று ராகுவிற்கு  ஆறில் தேவ பிரகஸ்பதி குரு விருச்சிகத்திலும், எட்டில் ராகுவை காட்டிக் கொடுத்த சந்திரன் மகரத்திலும் !


பொதுவாக ஜோதிடம் அறிந்தவர்கள், ஆறு, எட்டு என்பது மறைவு ஸ்தானமாச்சே... ராகுவோடு தொடர்பு பெறாத நிலை தானே என சிந்தனை வரும்.


அப்படியல்ல...


பொதுவாக அசுர குணம் எப்போது வெளிப்படும் ? 


எதிரிகளை பார்த்தவுடன் அசுர குணம் ஆர்ப்பரித்து நிற்கும் !


எதிரிகள் யார் ?


தான் அமர்ந்திருக்கும் ஆறு மற்றும் எட்டில் அமர்ந்துள்ள கிரகங்கள் தான் எதிரிகள் !


அதேபோல், அசுர குணம் படைத்த ராகு விஷம் கக்கிய திருவாதிரை  நட்சத்திரத்தில் அமர்ந்தவுடன் பலவானாகி நிற்கிற அச்சமயத்தில், குருவும், சந்திரனும் ஆறு எட்டில் அமர்ந்திருப்பதை பார்க்கிறான். 


ஆஹா தேவர்கள் மறுபடியும் நம்மிடம் மோத பார்க்கிறார்கள் என பெரும் யுத்தத்திற்கு தயாராகிறான். தேவர்கள் என்பது வேறு யாருமல்ல நம்மிடம் உள்ள நல்ல குணம், ஜீவசக்தி !


குரு என்பது நம் ஜீவ சக்தியை பராமரிக்கும் கிரகம் ! சந்திரன் நம் தேகத்தை தாங்கும் கிரகம் !


இரண்டையும் அழிக்க ஆயத்தமாகிறான்... அதற்கான நேரம் வருவதற்காக காத்திருக்கிறான்...


25.12.2019 அன்று  ரோக  காரகரான செவ்வாய் ராகுவிற்கு ஆறில் அதாவது விருச்சிகத்தில் அடியெடுத்து வைக்கிறார். எட்டில் நீர்கிரகமான சுக்கிரன் மகரத்தில். ராகு அமர்ந்திருக்கும் இடமோ காற்று ராசியான மிதுனத்தில் !


அன்று அமாவாசை !  நவகிரகங்களின் தலைவன் சூரியனோ கேது பிடியில், முழு சூரிய கிரகணம் ! சூரியன் மட்டுமல்ல, மற்ற கிரகங்களான குரு, சனி, சந்திரன், புதன் இவையனைத்தும் தனுசு ராசியில் மற்றொரு அரவமான கேது பிடியில் !


ஆம் 25.12. 2019 அன்று மூல நட்சத்திரம் தனுசு ராசியில் 6 கிரகங்கள் !


ராஜ கிரகங்கள் எல்லாம் கேது பிடியில் பலமற்று இருக்க, ராகு என்ற அசுரன்  தன்போரை துவக்கினான். 


எதிர்க்க எவருமின்றி சுற்றி சுழலுகிறான்.


அவனுடைய ஆயுதம் காற்று, நீர் !


அவன் தாக்கும் இடம் தொண்டை (புதன்) ராகு தற்போது  அமர்ந்திருக்கும் இடம் மிதுனம். மிதுனம்  புதனின் வீடு. 


அடுத்து, நுரையீரல் ( சனி ) !  


அடுத்து ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறன் (செவ்வாய்)


அடுத்து சிறு நீரகம் ( சந்திரன் ) தொடர்ந்து மூளை, ஜீவ சக்தி (குரு) !


ராகு,  நம் மீது தொடுத்த போரில் நேற்று வரை (20.03.2020 ) , உயிரழந்தவர்கள்  எண்ணிக்கை 11,387/-  நபர்கள்.


மனிதர்களாகிய நாம், ராகுவை எதிர்த்து போரிடவில்லை. போரிடவும் இயலாது. ராகுவின் விளைவுகளை மனித மூளை கொண்டு தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறோம். விளைவுகள் அதிகமாகிடாது தடுத்து கொண்டிருக்கிறோம்.


இதற்காக உலக நாட்டின் தலைவர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் மருத்துவ துறையினருக்கும், மற்ற துறையினருக்கும்  நாம் நன்றி  செலுத்த கடமைபட்டுள்ளோம்.


இந்த தடுப்பாட்டத்தில் நாமும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.


அரசுகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கூறிவரும் விதிகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.


அசட்டு தைரியத்தையும், அசட்டு நம்பிக்கையையும் அறவே தவிர்த்து அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும்.


 Social Distance ஐ தற்போது கடைபிடிப்பதே  சாலச்சிறந்தது.


அசுரன் ராகுவிற்கு, நல்லவர் யார் ? தீயவர் யார் என்று தெரியாது. 


இன்று 22.03.2020 ல் மகரத்திற்கு வரும் செவ்வாயும், 30.03.2020 அன்று மகரத்திற்கு வரும் குருவும், ராகுவின் உக்கிரத்தை அதிகரிக்க கூடும்.


எனவே, அரசு சொல்வதை அப்படியே கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
அப்படியே கேட்போம். அரவத்தின் விளைவுகளை தவிர்ப்போம்.


சரி எப்போது மாறும் இந்நிலை.


இன்னும் 55 நாட்களுக்கு இந்நிலையை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும்.


அதாவது குரு வக்கிர ஆரம்ப நிலை தான், மாற்றத்தின் ஆரம்பம்.


16.05.2020 அன்று குரு வக்கிர ஆரம்பம்.
வைகாசி 3 ம் தேதி, நவ கிரகங்களின் தலைவன் சூரியனை,  குரு வலிமையோடு தனது பார்வையை செலுத்துகிறார். ஒளி கிரகமான சூரியன், குருவின் அருளால் வலுப்பெற,  இருள் கிரகமான ராகு கட்டுப்பட துவங்கும்.


தொடர்ந்து 20.05.2020 அன்று, ராகு திருவாதிரையில் இருந்து மிருகசீரிடத்திற்கு நகர்கிறார்.


ராகுவின் வீரியம் முற்றிலும் குறையத் துவங்கும். 


கிரக நிலைகளின் படி பாரதத்திற்கு அதிக சேதமிருக்காது. இது ஞானிகள்  வாழும் பூமி.


இன்னும் 55 நாட்கள் எப்படி நகர்த்த இயலும். 


வேறு வழியில்லை.  எளியவர்களுக்கு உதவுவோம். அரசுக்கு ஒத்துழைப்போம்.


அசுரனின் ஆதிக்கம் நிரம்பிய இந்நாட்களில், அசுர உணவான அசைவத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.


மனித மூளை, நிச்சயம் விளைவுகளை கட்டுப்படுத்தும்.


இந்த 55 நாட்கள்,  நம்மை நாமே அறிந்து கொள்ள கடவுள் கொடுத்த வரம். இயற்கைக்கு முன்னால் நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நமது அகந்தையை அழிக்கும்.


தவம் இயற்றுங்கள், ஆயுள் காரகன் சனியை பலப்படுத்த மூச்சுபயிற்சி செய்யுங்கள். 


இயலாதவர்கள் சுவாச ஓட்டத்தை மட்டும் கவனியுங்கள். அமைதியும், ஆனந்தமும் பெருகும். ரமண மகரிஷி அளித்த எளிய வழிமுறை இது. முயற்சி செய்யுங்கள்.


சந்திரன் பலம்பெற, ஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகங்களை பாராயணம் செய்யுங்கள் நல்ல பலன் அளிக்கிறது.


அதேபோல, சூரியன் பலம்பெற, ரமணர் அருளிய அருணாச்சல அட்சரமண மாலை படியுங்கள். சித்தர்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள்.


ஆறு, எட்டு ஸ்தானங்கள் தொடர்பு பெறுவது வலிமையான தோஷ நிலை. 


இந்நிலையை அறுத்தெரிய, திருவாதிரைக்கு வேதையான திருவோணத்தில்  அவதரித்த, திருவேங்கடவனின், வலது கரத்தில் அமர்ந்துள்ள சுதர்சன சக்கரத்திற்கே அதிக வலிமை ! 


வீரியம் மிக்க விஷ வைரஸை செயல் இழக்க, ஸ்ரீ நிகமாந்த தேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள். 


நம்மையும், நம் வீட்டையும், நம் நாட்டையும் காக்கும் மிக வலிமையான ஸ்லோகம் இது.


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்