மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே வேளையில் மக்களின் அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கைகள்

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே வேளையில் மக்களின் அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான அளவு காய்கறிகள் கிடைக்க மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களின் இருப்பு உறுதி செய்திட மொத்த வியாபாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பருப்பு, நவதானியங்கள், எண்ணெய் மற்றும் இதர மளிகை பொருட்கள் ஆகியவை அடுத்த 3 மாதத்துக்கு தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளது. மேலும் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மத்தியபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தொடர்ந்து தங்கு தடையின்றி வந்து கொண்டிருக்கிறது. காய்கறிகளை பொறுத்தவரை அவை 3 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகும் நிலை உள்ளதால் அனைத்து மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளிலும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளது. மேலும் காய்கறிகளில் பெரும்பான்மையானவை வேலூர் மாவட்டத்திலேயே விளைவிக்கப்படுவதால் தொடர்ந்து அவை விவசாயிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வேலூர் மாவட்டத்தை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் தேவைக்கு அதிகமாகவே அனைத்து பொருட்களும் தொடர்ந்து கிடைத்து வருவதால் மக்கள் பதற்றப்படாமல் அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்கும் போது காய்கறிகள் குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு தேவையானவற்றையும், மளிகை பொருட்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையும் வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். தினசரி காய்கறி கடைகளுக்கும், மளிகை கடைகளுக்கும் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை தடையில்லாமல் எடுத்து செல்ல வாகனங்களுக்கு அந்தந்த தாசில்தார்களால் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை முறையாக பயன்படுத்தி அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வியாபாரிகள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் தங்களது தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கவும், சமூக விலகலை முழுமையாக கடைபிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்