கொரோனா தொற்றுநோய் தடுப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சாப்பிட உணவின்றி தவிர்க்கும் மக்களுக்காக, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மாநில தலைவர் பரசுராமன் அவர்கள் உணவுகளை வழங்கி வருகிறார். திருவண்ணாமலையில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு தேவையான உணவுகள் பத்திரிக்கையாளர் நல சங்கத்தின் சார்பாக உணவுகள், மற்றும் தண்ணீர் கேன் வழங்கப்பட்டது.