சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை திருவள்ளூர் தெற்கு மாவட்டம் இன்று கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக,
தேசிய தலைவர் திரு.ரா.செல்வகணேசன் MCA அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் அமைப்பின் சார்பாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் *ச.பாக்கியராஜ் தலைமையில் மற்றும் நமது அமைப்பின் உறுப்பினர்கள் முன்னிலையில் மஞ்சள் எலுமிச்சை வேப்பிலை டெட்டால் கலந்த தண்ணீர் மூலம் வைரஸ் தொற்று பரவாதபடி முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை திருமுல்லைவாயல் அடுத்து பொத்தூர் கிராமப்பகுதியில் கிருமி நாசினி தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில் பொத்தூர் பகுதி பொதுமக்கள் மற்றும் நமது உறுப்பினர்கள் திரு. தினகரன் திரு . பிரபு திரு. வெங்கட் திரு . கார்த்திக் திரு.சபி கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து கோரோனோ வைரஸ் தொற்று பரவாது படிக்கு கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எங்கள் அமைப்பு சார்ந்த அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறோம். மேலும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் அனேக சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து தீர்வு கண்டு மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறோம்.
திருவள்ளுவர் தெற்கு மாவட்ட தலைவர்
ச.பாக்கியராஜ்