மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும்

மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது கடுமையான நடவடிக்கை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மக்களின் கடமை. கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தியவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துதல், கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய 4 விஷயங்களை தமிழக அரசு செய்து வருகிறது, இது ஒரு தொற்று நோய். அது சாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோரும் விழிப்புடன் இருந்து, அரசின் அறிவுரைகளைக் கேட்டால் தான், நாம் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுக்க முடியும். மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லையென்றால், மூன்றாம் நிலையான ஒரு அபாய நிலைக்குச் சென்று விடுவோம். மருத்துவ மாநிலமாக தமிழகமும், மருத்துவத் தலைநகராக சென்னையும் விளங்குகிறது. தலைசிறந்த மருத்துவம் இங்கு வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்