கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டர் அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) சத்தியா, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய பிரதிநிதிகள், ஜைன மத பிரதிநிதிகள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்க உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை கலெக்டர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுரைகள் தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வந்தவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மருத்துவ பரிசோதனை செய்து தங்கள் இல்லங்களில் தனிமை படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ஆய்வு அறிக்கை வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, குடிநீர், உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், ஓசூர் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 50 எண்ணிக்கை கொண்ட வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் எந்த ஒரு நோய்க்கும் நிரந்தரமாக சிகிச்சை அளிக்க முடியும். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ரூ.1.50 கோடி மதிப்பில் அத்தியாவசிய தேவைகளான படுக்கைகள், போர்வைகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சமின்றி இருக்க வேண்டும். இது குறித்து அனைத்து சமுதாய தலைவர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.


 


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்