கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டர் அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) சத்தியா, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய பிரதிநிதிகள், ஜைன மத பிரதிநிதிகள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்க உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை கலெக்டர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுரைகள் தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வந்தவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மருத்துவ பரிசோதனை செய்து தங்கள் இல்லங்களில் தனிமை படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ஆய்வு அறிக்கை வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, குடிநீர், உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், ஓசூர் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 50 எண்ணிக்கை கொண்ட வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் எந்த ஒரு நோய்க்கும் நிரந்தரமாக சிகிச்சை அளிக்க முடியும். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ரூ.1.50 கோடி மதிப்பில் அத்தியாவசிய தேவைகளான படுக்கைகள், போர்வைகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சமின்றி இருக்க வேண்டும். இது குறித்து அனைத்து சமுதாய தலைவர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்