சங்கரன் கோவிலில் அரசு நிவாரணத் தொகை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்

 


சங்கரன் கோவிலில் அரசு நிவாரணத் தொகை அமைச்சர் துவக்கி வைத்தார். தென்காசி. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு     உதவிடும் வகையில் தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா நகர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு 1000 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படி பொதுமக்களிடம் அவர் கூறினார். சமூக இடைவெளியை கடை ஊழியர்கள் பின்பற்றி பொருட்களை வழங்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதே போன்று சங்கரன்கோவில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள மொத்த கூட்டுறவு பண்டக சாலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி சென்று பொது மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கினார்


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்