கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி ரெட்கிராஸ் இணைந்து 60 நலிந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்






கோட்டாட்சியர் சே.கணேஷ், துணை ஆட்சியர் ஆ.காமராஜ் வழங்கினர்கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வருவாய் ஈட்ட முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய், உப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஒரு குடும்பத்தினருக்கு 1,250 மதிப்பீட்டில் 60 குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்வு காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் சங்க தலைவர் சே.கணேஷ் தலைமை தாங்கி கரோணா நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.   வேலூர் துணை ஆட்சியர் ஆ.காமராஜ், கருணாலயா குழந்தைகள் காப்பகத்தின் இயக்குநர் கஸ்தூரிபால்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன்,  தாசில்தார்கள்            எம்.குணசீலன்,  ராஜேஸ்வரி,  மண்டல துணை வட்டாட்சியர் முரளிதரன், துணைவட்டாசியர் மகேஸ்வரி சித்ரா, வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், செந்தாமரை, ஜனனி காட்பாடி ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.ராதாகிருஷ்ணன், காந்திலால், பால்ராஜ், செ.ஜ.சோமசுந்தரம் பாரத சாரண சாரணீய அமைப்பின் மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காட்பாடி ஜாப்ராபேட்டையில் உள்ள மினிஸ்டிரி ஆப் மெர்சி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், கருணாலயா குழந்தைகள் காப்பத்தின் குழந்தைகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் சாலையோர ஆதரவற்ற குடும்பத்தினருக்கும் *மினிஸ்டிரி ஆப் மெர்சி, கருணாலயா குழந்தைகள் காப்பகமும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து ரூபாய் 75ஆயிரம் மதிப்பீட்டிடல் அரிசி, பருப்பு, சர்கரை, சமையல் எண்ணெய், மிளகாய், உப்பு, புளி, கோதுமை மாவு, பிஸ்கட் ஒரு பேக்கட், மஞ்சள், மிளகாய், மாசால பொடி வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஒரு குடும்பத்தினருக்கு 1,250 மதிப்பீட்டில் 60 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.*  காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டது.  மீதமுள்ள காட்பாடி வேலூர் பகுதியினை சுற்றியுள்ள குடும்பத்தினருக்கு அவர்களது வீட்டிற்கே சென்று அளிக்கப்பட்டது. மேலும் சாலையோரம் உள்ள குடும்பத்தினருக்கும் இருப்பிடத்திற்கே சென்று அளிக்கப்பட்டது. வருவாய் ஈட்ட முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து கரோனா நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, சர்கரை,   உள்ளிட்ட மளிகை பொருட்களை குடும்பத்தினருக்கு கோட்டாட்சியர் சே.கணேஷ், துணை ஆட்சியர் ஆ.காமராஜ் வழங்கிய போது எடுத்தப்படம் உடன் கருணாலயா இயக்குநர் கஸ்தூரிபால்ராஜ், ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர்.  சாலையோரம் வசிக்கும் குடும்பத்தினருக்கு கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து கரோனா நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, சர்கரை,   உள்ளிட்ட மளிகை பொருட்களை குடும்பத்தினருக்கு கோட்டாட்சியர் சே.கணேஷ், வழங்கிய போது எடுத்தப்படம் உடன் கருணாலயா இயக்குநர் கஸ்தூரிபால்ராஜ், ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர்.



 

 




 


 



 



கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்