கிருஷ்ணகிரியில் கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த 1000 குடும்பங்களுக்கு நிவாரணம்

கிருஷ்ணகிரியில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக மாநில விவசாய அணி துணை தலைவர்  திரு.D.மதியழகன் அவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வண்ணம் 144 தடை உத்தரவினால் தினகூலிக்கு செல்லும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் முற்றிலும் வருமானமின்றி வீட்டில் உணவுக்கு பஞ்சம் நடமாடும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் மக்களுக்கு உதவும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை பின்பற்றி கிருஷ்ணகிரியின் திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் திரு. D. மதியழகன் அவர்கள் கிருஷ்ணகிரி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 1000 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அரிசி, துவரம் பருப்பு, சமையல்எண்ணெய், சர்க்கரை மற்றும் முக கவசங்கள் ஆகியவை கொடுத்து  உதவினார். மேலும் ஒரு குடும்பத்திற்கு நூறு ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் வழங்கும்  நிகழ்வில்  கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்  கொண்டனர்.


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்