குற்றாலம் அருகே பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம். போலீஸார் விசாரணை




குற்றாலம் அருகே பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம். போலீஸார் விசாரணை.

 

தென்காசி,    குற்றாலம் அருகே உள்ள மேலகரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர கந்தன் (வயது 55).இவருக்கும், மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தவர், மாடியில் துர்நாற்றம் வீசுவதாக தென்காசியில் வசித்துவரும் சங்கர கந்தனின் சகோதரர்    ரெங்கராஜுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் விரைந்து சென்று பார்த்தபோது, சங்கர கந்தன் பிணமாக கிடந்துள்ளார் மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து குற்றாலம் போலீசில் ரெங்கராஜு புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சங்கரகந்தன் வலிப்பு நோய் மற்றும் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நோயால் அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

 

 



 



கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்