சுரண்டையில் அன்பழகனுக்கு அஞ்சலி. திமுகவினர் மௌன ஊர்வலம்

சுரண்டையில் அன்பழகனுக்கு அஞ்சலி. திமுகவினர் மௌன ஊர்வலம். சுரண்டை , திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுரண்டை நகர திமுக மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. சுரண்டை  அண்ணா சிலையில் இருந்து பஸ் ரோடு வழியாக பாவூர்சத்திரம் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முடிவடைந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு சேக் முகமது, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி, அவைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயராஜ், துணைச் செயலாளர்கள் சங்கரநயினார், பாண்டியன் இளைஞரணி சுப்பிரமணியம் மற்றும் திமுக நிர்வாகிகள் தனலட்சுமி, கணேசன், ராஜேந்திரன், சங்கரபாண்டியன், சார்லஸ்,  உன்வேலன், அரவிந்தசாமி,மாரி. பேச்சாளர் ஞானசீலன். சாமுவேல்மனோகர், முத்து சுப்பிரமணியம், பவுன்ராஜ், டிஜிட்டல் மாடசாமி, பசுபதி, லட்சுமணன், குமார், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து இரங்கல் தெரிவித்தனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்