குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிறிது சிறிதாக கிராமத்திற்குள் நுழையும் பிளாஸ்டிக் கேன், பாட்டில் குடிநீர்

மக்கள் நலனை காக்க அதிகாரிகள் குடிநீர் தயாரிக் கும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனிதன் உயிர்வாழ உணவு எவ்வளவு அவசியமோ அதைவிட சுத்தமான குடிநீர் அவசிய மானது. நீரானது மனித உடலில் நடை பெறும் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடலில் நடைபெற்ற வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியபங்கு வகிக்கிறது. நீரின் அருமையை அறிந்த முன்னோர்கள் பின்வரும் தலைமுறைக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யும் வகையில் அப்பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 4 முதல் 10 குடிநீர் ஊரணியை அமைத்து பாதுகாத்து வந்தனர். அவ்வாறு அமைக்கப் பட்ட ஊரணிக்கு மழைநீர் வர மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து நீர் வரத்துவாரிகள் அமைத்து ஊரணியில் சேகரித்த நீரை குடிநீராக பயன்படுத்தினர். இந் நிலையில் நகரமயமாதல், சுற்றுசூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக கிராமம், நகரம் என பாகுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் மாசு அடைய தொடங்கியது. இதனால் குடி நீருக்காக பயன் படுத்திய பெரும்பாலான ஊரணிகள் குளிக்க பயன் படுத்தப் பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக மழை யளவு குறைந்து, கண்மாய், ஊரணிகள் வறண்டு நீரின்றி காணப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு பயன்படுத்தும் குடிநீருக்காக பொதுமக்கள் வீதி வீதியாக அலைய வேண்டி உள்ளது. இந்நிலை யில் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி புற்றீசல் போல் முளைத் துள்ள குடிநீர்தயாரிக்கும் தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் நீரை அடைத்து நகர்புறங்களில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலை யில் தற்போது சிறிது சிறிதாக கிராமத்திற்குள்ளும் நுழைய விட்டுள்ளனர். நீர்நிலைகள் வறண்டநிலை யில் மக்களும் வேறு வழியின்றி கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை குடிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தேவை அதிகமானதால் குடிநீர் அதிகமானதால் குடிநீர் தயாரிக்கும் தொழிற் சாலைகள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே தொழிற்சாலைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது தானா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குடிநீர் தயாரிக்கும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர் கூறுகையில், முதலில் ஆழ்துளை கிணற்றிலிருந்து ராட்சத மோட்டார் கொண்டு தொட் டியில் நீர்சேகரிக்கப்படுகிறது. பின்னர் நீரின் தன்மைக்கு ஏற்ப அதில் குளோரின் பவுடர் சேர்க்கப்படும். இதனை தொடர்ந்து நீரானது கார்பன் வடிகட்டிக் குள் சென்று தொடர்ந்து மணல் வடிகட்டியை சென் றடையும். இந்த செய்முறை யில் பெரும்பாலும் நீர்சுத்தமடைந்து விடும். இருந்த போதிலும் தொடர்ந்து கடைசியாக பில்டர்மெம்ரேன் மூலம் வடிகட்டப்பட்டு பாட்டிலில் நீர் நிரப்பும் அறைக்கு செல்லும். அங்கு நீர் கதிர்வீச்சு முறைக்கு உட்படுத்தப்பட்டு கிருமிகள் அழிக்கப்பட்டு பாட்டிலில் நீர் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் படும். இது பெரும்பாலும் எல்லா குடிநீர்நிறுவனங் களிலம் ந களிலும் நடக்கும் செயல் முறையாகும். இதில் கார்பன், மணல், மெம்ரேன் பில்டர்கள் அடிக்கடி மாசடைந்துவிடும். அதிகபட்சமாக 6 மாதத் திற்கு ஒருமுறை இந்த பில்டர்கள் மாற்றவேண்டும். ஆனால் பெரும்பாலான குடிநீர் தயாரிக்கும் நிறு வனங்கள் செலவு அதிகமாகும் என்பதற்காக இதனை ஒன்றறை வருடம் வரை மாற்றாமல் பயன்படுத்த கூடும். மேலும் நீரின் சுத்தத்திற்காக அதிகளவு குளோரின் பவுடர், சுவைக்காக பிஎச் பூஸ்டர்சேர்க்கப்படும். இதனிடையே பாட்டிலில் நிரப்பப்படும் குடி நீர் கார்பன், மணல் வடிகட்டு தலுக்கு மட்டுமே உட்படுத்தப்படும். காரணம் பாட்டிலில் குறைந்த விலையில் கிடைப்பதால் அதன் சுவை பற்றி யாரும் குறை கூறுவதில்லை. மேலும் பாட்டில் குடிநீரை நடுத்தர மக்களும், மது குடிப்ப வர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிலசமயம் அதிகளவில் குடிநீர்ஆர்டர்வரும் போது சில நிறுவனங்கள் முறை கேட்டில் ஈடுபடவாய்ப்புள் ளது என்றார். இது பற்றி அரசு மருத்துவரிடம் கேட்டபோது: தொழிற்சாலை தயாரிப்பு என்றால் அங்கு தயாரிக்கப் படும் பொருட் கள் அனைத் தும் வேதி வினைக்குட் படுத்தப்படுவது வழக்கம். மற்ற பொருட்களை விட நீர் உடலில் எளிதில் வினைபட கூடியது. இதனால் நீரில் கலந்திருக்கும் வேதி பொருட்கள் எளிதாக உடலின் அனைத்து பாகங் களுக்கு சென்றடையும். அப்படிப்பட்ட நீர்சுத்த மாகவும், பாதுகாப்பான தாகவும் இருப்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். மேலும் இயற்கையாக கிடைக்கும் நீரைசுவைக்கா வேதிபொருட்கள் கலப்பதால் நீரில் இயற்கை யாக உள்ள மினரல்ஸ் அழிந்து விடும். குளிர் பானங்கள் எவ்வாறு உடலுக்கு தீங்குவிளைவிக் கும் என கூறிவருகிறோமோ அது போலவே வேதி பொருள்கள் கலந்த நீரும் உடலுக்கு தீங்கு விளைவிக் கும். ஊரணி நீரை ஒரே நேரத்தில் ஒருலிட்டர் குடிக்கும் கிராமவாசிகள் பாட்டில் அடைக்கப்பட்ட நிறுவனதயாரிப்பு நீரை அவ்வாறுகுடிக்கமுடியாது. ஏனென்றால் இதில் கலந்துள்ள வேதிபொருட் கள் எளிதில் தாகம் தீர்ப்பது போல் மாயை ஏற்படுத்தி குடலை மந்தமாக்கி விடும். ஆனால் மீண்டும் தாகம் எடுக்கும். ஒருசிலருக்கு பாட்டில், பாக்கெட் குடி நீர் ஒவ்வாமையை ஏற்படுத்த கூடும் இதற்கு வேதி பொருட்களே காரணம். எனவே நிறுவனம் தயாரிக் கும் குடிநீர் சுத்தமானது தான் பாதுகாப்பானது தான என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் கடமையா கும். மேலும் பொதுமக்கள் வீட்டின் அருகிலே கிடைக் கும் காவிரி,கிணறு நீரை நன்கு கொதிக்க வைத்து, குளிர செய்து வடிகட்டி குடிப்பதே சிறந்தது என்றார்.


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்