| கல்லூரி மாணவிகளின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து டிக் டாக் வீடியோ பதிவேற்றம் செய்தவர் கைது இரு செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் சுரண்டை அருகே பரபரப்பு

இரு செல்போன் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கல்லூரி மாணவிகளின் போட்டோக் களை ஆபாசமாக மார்பிங் செய்தும், ஆபாசமாக டிக்டாக் செய்து வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரு ஸ்மார்ட் செல் போன்கள், மெமரி கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெருகும் சமூக குற்றங் களை தடுப்பதற்காக டிக்கை தடைசெய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு பெரும்பாலானோர் கோரிக்கை வைத்திருந்தனர். டிக்டாக் செய்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதைப்பார்த்து ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாணவர்கள் எல்லை மீறி சில பெண்களை வீடியோ எடுத்து அவர்க ளுக்கு தெரியாமல் டிக் டாக் செய்து பதிவேற்றம் செய்த சம்பவங்களும் நடந் துள்ளது . கல்லூரி மாணவி கள், இளம் பெண்களையும் ஆபாசமாக டிக்டக் பதி வேற்றம் செய்ததாக, அவர்களின் போட்டோக் களை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளதாகவும் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கூலிபத்து அருணா சலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (19). இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்லாமலும் ஊரை சுற்றி வருகிறார். இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் டிக்டாக்கில் பிரபலம். இதுவரை 947 வீடியோக்கள் பதிவேற்றம் செய்த கண்ணனுக்கு 4.18 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இதனால் இவரது வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்கு கள் கிடைத்தன. இதுவரை மொத்தம் 1.37 கோடி ம 1.37 கோடி லைக்குகள் இவரது வீடி யோக்களுக்கு கிடைத் துள்ளது. இதனால் உற்சாக மான கண்ணன் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தென்காசி அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருவதாக வும் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை போன்று தினமும் டிப்டாப்பாக ஆ ைட க ளை அணிந்தும்,செயலாகவும் இனிக்க ,இனிக்க பேசியும் பசியும் பல கல்லூரி மாணவிகளிடம் பழகி. மக்டாக் வீடியோவில் நடித்த அவர்களிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனை பயன்படுத்தி எந்த மாணவிக்கும் சந் தேகம் வராமலம் 15க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக சந்தித்து ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்திய சில் மாணவிகளிடம் நட்பு பாராட்டி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளிடம் செல்பி வீடியோ எடுத்துள்ளார். இதனிடையே கண்ணனும் அவரது இரு நண்பர்களும் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டனர். இதனை அடுத்து கண்ணனின் மாணவிகள் மற்றும் கிருமணமான இளம் பெண் களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அகம் அதனை அவ்வப்போது ரசித்து பார்த்து வந்துள்ளார் . மேலும் சில பணக்கார மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்களின் போட்டோக் களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சிலரிடம் ஏராளமான பணத்தை கறந்துள்ளார். இதில் பணம் தராத சில இளம் பெண் க ளின் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட போட்டோக் களை வெளியிட்டு உள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்த வாலிபரின் வலையில் சில தொழிலதிபர்கள் மற்றும் சில அரசு அதிகாரி களின் மகள்களும் சிக்கி யுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணனின் மிரட்டலுக்கு பயந்த சில மாணவிகள் பணத்திற்கு பதிலாக தங்களிடம் இருந்த தங்க மோதிரம் வளையல்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டு பெற்றோரிடம் தங்க நகை கள் தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் ஓரிரு மாணவி களின் குட்டு பெற்றோர் களுக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில பெற்றோர் தங்களது மகள்களின் எதிர்கால வாழ்க்கை எண்ணிபோலீசில் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆனால் கண்ணனின் மிரட்டல் அதிகரித்துக் கொண்டே சென்றதால் வேறுவழியின்றி தென்காசி எஸ்பி சுகுணா சிங்கிடம் புகார் மனு அளித் தனர். இதனை அடுத்து அவரது உத்தரவின் பெய ரில் புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் ,சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சைக்கிள் தினேஷ்பாபு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண் ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து ஸ்மார்ட் செல்போன்கள், மெமரி கார்டுகள், பென்டிரைவ் ஆகாயவறறை பறிமுதல் செய்து, மிரட்டி பணம் பறித்தல் ,மிர தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் , பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டதை அறிந்து அவரது இரு நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர் அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதில் கண்ணனின் தம்பியும் டிக் டாக் மோகத்தில் சிக்கி உள்ளார். இவரது சதித் திட்டங்களுக்கு அவரது தம்பியும் உடந்தையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்