தென்காசி செங்கோட்டையில் கடைகளுக்கு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆய்வு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் சீவநல்லூர் ஊராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளர் இராதா தலைமையில் அனைத்து கடைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் அணிந்துவர அறிவுரை வழங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் சீவநல்லூர் பகுதி மக்களுக்கு மாஸ்க் அணிவதின் அவசியம் கைகளை சுத்தமாக கழுவுதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆனந்த், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம், சீவநல்லூர் ஊராட்சி செயலர் இசக்கி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்