நீர்நிலை பகுதி என்று பத்திரப்பதிவு நிறுத்தி வைப்பு: வீடு, நிலத்தை விற்க முடியாமல் தவிக்கும் மக்கள்

நீர்நிலை பகுதி என்று பத்திரப்பதிவு நிறுத்தி வைப்பு:  வீடு, நிலத்தை விற்க முடியாமல் தவிக்கும் மக்கள்


சேலம் அருகே 70 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்களது வீடு மற்றும் நிலத்தை தேவைக்கு விற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். சேலம்-சங்ககிரி சாலையில் மகுடஞ்சாவடியை அடுத்துள்ளது வேம்படிதாளம் பகுதி. கடைகள், வணிவளாகங்கள், குடியிருப்புகள், வீடுகள் என்று ஏராளமான கட்டிடங்கள் வேம்படிதாளத்தில் உள்ளது. இதில் பல தலை முறைகளாக வசித்து வரும் குடும்பத்தினரும் ஏராளமாக உள்ளனர். இதேபோல் 70ஆண்டுகளுக்கு முன்னதாக சொந்தவீடு, கடைகள், வளாகங்கள் கட்டி வசிப்போரும், வாடகைக்கு விட்டுள்ளோரும் அதிகளவில் உள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்த பகுதியில் உள்ளவர்கள், தங்களுக்கு சொந்தமானவை என்று கூறிக் கொள்ளும் நிலங்களையோ, வீடுகளையோ பிறருக்கு விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் பல ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் முதலீடு செய்து பிளாட்டுகளை போட்டவர்களும் அதனை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பகுதி சார்ந்த எந்த நிலங்களையோ அல்லது வீடுகளையோ அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதே இதற்கு காரணமாக உள்ளது. கடந்த 2ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தநிலையானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்படிதாளம் சேலத்திற்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிகவளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், சிறுவணிக நிறுவனங்களும் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள 85சதவீத மக்கள் சொந்த வீடுகளில் மட்டுமே வசித்து வருகின்றனர்.

நூறாண்டுக்கு மேல் தலைமுறைகள் கடந்து இப்பகுதியில் வசிக்கும் மக்களும் கணிசமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் வசிக்கும் வீட்டிற்கும், தோட்டத்திற்கும், கடைகளுக்கும் முறையாக வரி செலுத்தி வருகின்றனர். தொழிலுக்கு ஏற்ற வகையில் உயர்மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்கள், தங்களது தேவைகளுக்காக வீடுகள், நிலங்களை விற்க முடியவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால், நீங்கள் வசிப்பது ஒரு காலத்தில் நீர்நிலையாக இருந்த பகுதி. எனவே அதை விற்க முடியாது. இதனால் பத்திரப்பதிவும் செய்ய முடியாது என்று கறாராக மறுத்து விடுகிறார்கள். ஏதோ ஒன்றிரண்டு பகுதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த பகுதியையும் நீர்நிலை என்று கூறி பட்டியல் ஒட்டி வைத்திருப்பதும், பத்திரப்பதிவு செய்ய மறுப்பதும் வேதனையாக உள்ளது.

இதற்கு அரசு உரிய தீர்வு காணாவிட்டால் பெரும் சர்ச்சைகள் எழுவதோடு தேவையில்லாத குழப்பங்களும் ஏற்படும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர். இது குறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்நிலை என்று வகைப்படுத்தப்பட்ட பட்டியல் தமிழக அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. இது போன்ற நிலத்திற்கு எந்தவித ஆவண பதிவும் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளை வழங்கிய தீர்ப்பின் காரணமாக பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது வேம்படிதாளத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். எனவே எந்த பகுதியில் நிலம் வாங்கினாலோ அல்லது விற்றாலோ சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள பட்டியலில் இல்லாத இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்,’ என்றனர்.

கருத்துகள்
Popular posts
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்