தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அளவு குறையத் தொடங்கிவிட்டது..!

கொரோனா வைரஸ் தொற்று நோய் அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அளவு குறையத் தொடங்கிவிட்டது



கொரோனா வைரஸ் தொற்று நோய் அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலியாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அங்கேயே முடங்கி உள்ளனர். மக்கள் வெளியே வர பயப்படுவதால் சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினம்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 9 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இறப்போரின் எண்ணிக்கை தினசரி 30ஐ கடந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் பாதிப்பு தலைநகரான சென்னையில் தினமும் 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இறப்பு விகிதமும் சென்னையில்தான் அதிகமாக உள்ளது. சென்னையின் பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டில் பாதிப்பு 800ஐ நெருங்கி வருகிறது. திருவள்ளூர் 453, காஞ்சிபுரம் 303 என்று பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோல, கோவை 583, மற்ற மாவட்டங்களில் பாதிப்பு தினசரி 100, 150, 200, 250 என்ற விகிதத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு என்பது அதிகரித்து வருவது மக்களிடையே ஒருவித பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர். கண்ணுக்கு தெரியும் நோய் என்றால் எப்படியாவது குணப்படுத்தி விடலாம். ஆனால், கொரோனா எந்த வடிவத்தில், எப்படி வருகிறது, யாருக்கு எல்லாம் நோய் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலைதான் இன்னமும் இருந்து வருகிறது. நல்லா இருப்பவரிடம் சகஜமாக பேசினால் அவர் பரிசோதனை செய்து கொண்டால் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பழகியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால், யாரிடம் பழகுவது என்று கூட தெரியாமல் மக்கள் இருந்து வருகின்றனர். கொரோனா 2வது அலை தாக்கம் அதிகரிப்பால் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கும், கோயில் கொடை விழா, பண்டிகைகளுக்கு குடும்பத்துடன் செல்வதை தவிர்த்து வருகின்றனர். கோடைகாலத்தில்  சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். இந்த முறை கொரோனால் அதுவும் தடைபட்டு போய் உள்ளது. அங்கு சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். அதிக பணம் செலவழித்து சுற்றுலாவுக்கு சென்று ஏன் கொரோனா வைரஸை வாங்கி வர வேண்டும் என்று மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர்.சென்னையை பொறுத்தவரை பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் ஒருவித அச்சத்திலேயே வேலைக்கு சென்று வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் செல்வதை குறைக்க தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் செல்லும் இடங்களுக்கு கட்டாயம் மாஸ்க் அணிவதை வழக்கமாக கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக சாலையில் மக்கள் நடமாட்டம் என்பது வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது.
சென்னை என்பது வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம் என்ற நிலைமை தற்போது மாறியுள்ளது. கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறி போய் உள்ளது. அதே நேரத்தில் ஒரு சிலர் கொரோனா பற்றி எந்தவித அச்சமும் இல்லாமல் சுற்றுவதையும் காண முடிகிறது. அவர்களை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பஸ்களில் குறைவான பயணிகளுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் இருக்கைகளில் அமரும் வகையில் தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவுரை மாநகர பேருந்தில் கொஞ்சம் கூட கடைபிடிக்கப்படுவதில்ைல. வழக்கமான நேரத்தில் இருப்பது போன்று மக்கள் முண்டியடித்து கொண்டும், நெரிசலில் சிக்கியும் பஸ்களில் செல்வதை காணமுடிகிறது. அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால், மக்கள் வேறு வழியின்றி பஸ்சில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஏறும் நிலைதான் உள்ளது. எனவே, கூட்டம் நெரிசல் நிறைந்த நேரத்தில் அதிக அளவு பஸ்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை தொடர்ந்து வலுக்க தொடங்கியுள்ளது. அதிகப்படியான  பஸ்களை இயக்காத வகையில் கொரோனாவின் பாதிப்பு எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு பயத்தால் சென்னைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் கூட சென்னைக்கு மீண்டும் வர வேண்டுமா என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை வரை சொந்த ஊரில் இருக்கலாம் என்று பலர் நினைத்து அங்கேயே தங்க தொடங்கியுள்ளனர்.  அதனால்தான் சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து பஸ், ரயில்களில் வரும் கூட்டம் வழகத்தை விட குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது. தென்மாவட்ட ரயில்களில் எப்போது பார்த்தாலும் டிக்கெட் இல்லாத நிலை இருந்து வருவது வழக்கம். ஆனால், இப்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் பக்கத்து மாவட்டத்துக்கு வரும் ரயில்களில் டிக்கெட் அனைத்தும் காலியாக இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் இன்னும் பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவை விரட்டி விடலாம் என்றும் ஒவ்வொரு விதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அரசு எச்சரிக்க தொடங்கியுள்ளது.

கருத்துகள்
Popular posts
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்