சிலிண்டர் மானியம்!
சமையல் சிலிண்டருக்கு அரசிடமிருந்து கிடைக்கும் மானியம் பலருக்கு முறையாக வருகிறதா இல்லையா என்று தெரியாமல் இருக்கும். அதை ஆன்லைன் மூலமாக மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

சிலிண்டர் மானியம்!

அரசிடமிருந்து சமையல் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மானியம் அனைவருக்கும் முறையாக வருகிறதா என்றால் அது சந்தேகம்தான். ஆதார் இணைப்பு போன்ற சிலர காரணங்களுக்காக சில நேரங்களில் மானியம் நிறுத்தப்பட்டுவிடும். ஒவ்வொரு முறையும் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது அதற்கான மானியத் தொகை வருகிறதா இல்லையா என்பதில் பலருக்கு சந்தேகமாக இருக்கும். அதைக் கண்டுபிடிக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலமாகவே அதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மானியத் தொகை எந்தக் கணக்கிலிருந்து மாற்றப்படுகிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

எப்படி மானியம் கிடைக்கும்?

சமையல் சிலிண்டருக்கான முழு சந்தை விலையையும் கொடுத்து முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அரசாங்க மானியம் பெற முடியாது. சிலிண்டர் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்துவதால் கள்ளச் சந்தையில் அரசின் மானிய விலை கேஸ் சிலிண்டர் விற்கப்படுவது பெருமளவு குறைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

எப்படி கண்டுபிடிப்பது?

Mylpg.in என்ற ஆன்லைன் தளத்தில் செல்ல வேண்டும்.

வெப்சைட்டின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.

உடனே புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் உள்ள பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா, இல்லையா என்பதை அதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்