வேலூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற ஒளிவரும் எல்.இ.டி பல்புகளின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தால், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் அவதி..?
வேலூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற ஒளிவரும் எல்.இ.டி பல்புகளின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தால், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி அவதிபடுகின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படும் முன்புநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் ஏராளமாக பொதுமக்களிடயே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஹெட்லைட்டில் அளவுக்கு அதிகமாக வெள்ளைநிற வெளிச்சத்தை வெளிப்படுத்தும் எல்.இ.டி பல்புகளை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநர்களின் கண்கள் கூசி பார்க்க முடியாததால் வழிதெரியாமல், அவ்வழியில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மோதியும், அருகில் உள்ள மின்கம்பங்கள் அல்லது பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை இருந்து வருகிறது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் விதிகளை மீறி வாகனங்களின் ஹெட்லைட்களில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற வெளிச்சத்தை அதிக அளவு வெளிப்படுத்தும் எல்.இ.டி பல்புகளை நீக்க சம்பந்தப்பட்ட வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்