ஆரணி ஆற்றுப் பகுதிகளில் கனிமா சுருட்டல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் அவலம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கமண்டலநாகநதி ஆற்றுபடுகைகளில் 300 பேருடன் ஷிப்டு முறையில் கருப்பு ஆடுகள் ஆசியோடு மணல் கனிமங்கள் கொள்ளைபோகிறது. மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதால் தடையின்றி மணல் கொள்ளை அரங்கேறி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் . தெரிவித்த வண்ணம் உள்ளனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிவர், புரெவி புயல் காரணமாகவும், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நவரை பட்டத்தில் விசாயிகள் சாகுபடி செய்து, அறுவடையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆரணி பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாறு, புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நிரம்பி ஏரிகளில் அடித்து செல்லப்பட்ட வெள்ளப்பருக்கால் ஆற்றுப் பகுதிகளில் மணல் அரிப்பு அதிகரித்ததால் கடந்த சில மாதங்களாக ஆறுகளில் தண்ணீர் இருந்ததால், மணல் கொள்ளை முழுமையாக நிறுத்தப்பட்டது.
தற்போது, ஆறுகளில் தண்ணீர் முழுமையாக வற்றியுள்ள நிலையில், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான தச்சூர், காமக்கூர், குண்ணத்தூர், எஸ்.வி.நகரம், மொழுகம்பூண்டி, விண்ணமங்கலம், வம்பலுர், மோட்டூர், மாமண்டூர், ராகுநாதபுரம், சாணார்பாளையம், அம்மாபாளையம், கீழ்நகர், மேல்சீசமங்கலம், ஆரணி டவுன் விஏகே நகர், புத்திகாமேட்டீஸ்வர் கோயில் அருகே என ஆரணி பகுதிகளில் உள்ள ஆறுகளில் இரவு, பகலாக அதிகாரிகள் ஆசியுடன் ஷிப்டு முறையில் மணல் மாபியாக்கள் உடன் கம்பெனியாக நடத்தி வருகின்றனர்,

பட்டப்பகலில் ஆற்றுப்படுகைகளில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் ஆறுகளில் ஜல்லடை போட்டு ஜலித்து வைத்து இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரி, டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை அரங்கேறி வருகின்றனர். மணல் மாபியாக்கள், ஆறுகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள முட்புதர்கள், சுடுகாட்டு பாதைகள், விவசாய நிலங்களையும் வாடகைக்கு எடுத்து மாட்டு வண்டி, டிராக்டர்களில் மணல் கடத்திச்சென்று இருப்பு வைத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் சப்ளை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, இவைகளை ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாவட்ட நிர்வாகம் என்று யாரும் கண்டுகொள்ளாததால் தடையின்றி மணல் கொள்ளை அரங்கேறி வருகின்றனர் மணல் மாஃபியாக்கள். எனவே கனிமவளம் கொள்ளை போவதை தடுக்க இனியாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தால்தான் மிஞ்சியுள்ள விவசாயிகளாவது பயிர் செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், மணல் திருட்டில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் நம்பர் பிளேட், பர்மிட் இல்லாமல் திருட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால். வாகனங்களை  பராமரிப்பின்றி இயக்குவதால் நாளுக்கு நாள் உயிர் சேதங்கள் அதிகரித்து வருகிறது. துணைபோகும் கருப்பு ஆடுகள் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம், உதவி கண்காணிப்பாளர் அலுவலம், மற்றும் நகர காவல்நிலையம் அருகில் உள்ள கடைகளில் முகாமிட்டு மணல் ரெய்டு செல்லும் போலீசார், வருவாய்துறை அதிகாரிகளின் வாகனங்களை இரவு, பகல் என 24 மணி நேரமும் நோட்டமிடுகின்றனர். காவல்துறை, வருவாய்த்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் துணையோடு தகவல்களை பெற்று மணல் கனிமா சுருட்டல் ஜோராக நடக்கிறது. எனவே, காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் அருகே சம்மந்தமில்லாமல் பல மணிநேரம் காத்திருக்கும் நபர்களை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுத்தாலே, மணல் கடத்தல் தடுக்க ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த தகவல் மாபியாக்களுக்கு தெரியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள்
Popular posts
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்