நாட்றம்பள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பகல் கொள்ளையில் (பொ) கலைவாணி..!
நாட்றம்பள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பகல் கொள்ளையில் (பொ) கலைவாணி..!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பில் இருப்பவர் ஜோலார்பேட்டையை சேர்ந்த கலைவாணி இவர் பகல் கொள்ளையில் மிக களவாணி தனமாக லஞ்ச பணத்தை பெறுவாராம், இங்கு பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு விபரம் அறிந்தவர்கள் கூட நேரடியாக சென்று பத்திரங்கள் பதிவு செய்ய முடியாதாம் சார்-பதிவாளர் அலுவலகத்தை சுற்றி உட்கார்ந்து இருக்கும் பத்திர எழுத்தாளர் மூலமாக சென்றால் மட்டுமே வேலைகள் நடக்குமாம் இல்லை என்றால் பத்திரத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் கண்டுபிடித்து பத்திரப் பதிவு செய்யாமல் மறுத்து விடுவாராம் நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலக பொறுப்பில் இருக்கும் கலைவாணி தனக்கு போய் சேரவேண்டிய லஞ்சப் பணம் ஒவ்வொரு பத்திர எழுத்தாளர்களிடம் தான் கொடுத்து வைத்திருப்பாராம் கலைவாணி அலுவலக பணி முடிந்து கடைசியாக வீட்டுக்கு போகும்போது சார்பதிவாளர் பொறுப்பு கலைவாணி ஒவ்வொரு பத்திரமும் எவ்வளவு பத்திரங்கள் பதிவு செய்தார் என பென்சிலில் குறிப்பிட்டு வைத்துக்கொண்டு அன்று வசூலான லஞ்சப் பணத்தை கொண்டு வைத்தவர்களிடம் வாங்கி செல்வாராம் சில சமயங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு இருக்கும் சமயங்களில் தனது உறவினர்களை வரவழைத்து லஞ்சப் பணத்தை அவர்கள் மூலம்  வீட்டிற்கு பத்திரமாக கொண்டு போக சொல்வாராம், கலைவாணி என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள், இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சார்பதிவாளராக பணி செய்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு ஓய்வில் இருப்பதாக அலுவலக வட்டார தரப்பில் தெரிவித்துக் கொள்கிறார்கள் இதைப் பயன்படுத்தி கொண்டு சார்பதிவாளர் (பொறுப்பு) கலைவாணி மிக களவாணி தனமாக கையாளுகிறாராம் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளாராம், எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை செய்தால் கணக்கில் வராத லஞ்சப் பணமும் சிக்கக் கூடும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் 

கருத்துகள்
Popular posts
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்