+2 அரசு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்பு

  +2 அரசு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு 
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்பு

கொரோனா நோய் தோற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் +2 அரசு பொதுத்தேர்வை ஒத்திவைப்பு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு 
தமிழகத்தில் மே-5ஆம் தேதி முதல் நடைபெற உள்ள +2 அரசு பொதுத்தேர்வுகளை மாணவர் நலன் கருதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பினை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அறிக்கையில் கூறியிருப்பதாவது 
கொரோனா நோய் தொற்று பரவல் தீவிரம் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.  மேலும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மே-5ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென தமிழக அரசை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. பல்வேறு தரப்பினர் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்டுவதாகவும் +2செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவித்துள்ளதை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம். 
             

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்